Monday

தாய்ப்பாலை தானமாக பெறும் அவுஸ்திரேலிய பெண்கள்

அவுஸ்திரேலியாவில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாத பெண்கள், தாய்ப்பால் வங்கியில் இருந்து தானம் பெற்று வருகின்றனர்.
குழந்தை பெற்ற பெண்களில் பலர், தாய்ப்பால் சுரக்காமல் கஷ்டப்படுகின்றனர். இதனால் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து இல்லாமல் போவதுடன், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து உடல்நலம் பாதிக்கப்படுகின்றது.

எனவே இவர்கள் தாய்ப்பால் வங்கியில் இருந்து தானம் பெற்று வருகின்றனர். இதற்காகவே சமூக நெட்வொர்க் அமைப்பு செயல்பட்டு வருகிறது.

ஹியூமன் மில்க் 4 ஹியூமன் பேபிஸ் என்றழைக்கப்படும் இந்த அமைப்பு, பெண்களிடம் தாய்ப்பாலை இலவசமாக பெற்று தேவைப்படும் பெண்களுக்கு வழங்கி வருகிறது.

பெண்களும் ஆர்வமுடன் தானம் அளித்து வருகின்றனர். ஆனால் இவ்வாறு செய்வதால் அதில் உள்ள பக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகளால் குழந்தைகளுக்கு எச்ஐவி மற்றும் தொற்று நோய்கள் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

No comments:

Post a Comment